AYAN EDUCATIONA NEWS

Friday, 15 January 2021

*🙋‍♂️அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத ஆதார் கட்டாயம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு*

*🙋‍♂️அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத ஆதார் கட்டாயம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு*

*⚡அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு ஆதார் கட்டாயம்*

_டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கே. நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:_

*⚡2020 டிசம்பர் பருவத்துக்குரிய துறைத் தேர்வுகள் பிப்ரவரி 14 முதல் 21-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளன.*

*⚡விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.*

*⚡விதிமுறைகள், பாடத்திட்டம், தேர்வு அமைப்பு முறை, தேர்வு மையம், தேர்வு கட்டணம், கால அட்டவணை உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம்.*

*⚡இந்தத்துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.*


Thursday, 14 January 2021

*🙋‍♂️NMMS குறித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுத்துறையின் முக்கிய வழிகாட்டுதல்கள்*

*🙋‍♂️NMMS குறித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுத்துறையின் முக்கிய வழிகாட்டுதல்கள்*

*⚡NMMS - தேசிய வருவாய்  வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு முன்னிட்டு, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,*

_அரசுத் தேர்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது._

*⚡அதன்படி, 2021-ம் ஆண்டு பிப்ரவரி 21 -ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்புப் பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை*

_28.12.2020 முதல் 08.01.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்._

*⚡மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்*

_www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக_

*⚡05.01.2021 முதல் 12.01.2021 வரை பதிவு செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.*

*⚡1) கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினைப் பதிவு செய்தவுடன் பெரும்பாலான விவரங்கள் உடனடியாகத் திரையில் தோன்றும். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.*

*⚡புதியதாக பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு செய்தபின் புதிய  USER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.*

_பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:_

*⚡2) தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டுச் சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.*

*⚡3) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.*

*⚡4) பள்ளி முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் பதிவு செய்யப்படவேண்டும்.*

*⚡5) வீட்டு முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினைப் பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.*

*⚡6) பெற்றோரின் தொலைபேசி/ கைபேசி என்ற இடத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிய வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற இடத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினைப் பதிந்தால் போதுமானது.*

*⚡7) பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.*

*⚡8) 05.01.2021 பிற்பகல் முதல் 12.01.2021 வரை பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் 12.01.2021 –க்குள் சரி செய்து கொள்ளலாம். அதன்பின் கண்டிப்பாக மாற்ற இயலாது.*

*⚡பதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report மற்றும் தேர்வர்களின் விவரத்தினை (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம்) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் 20.01.2021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.*

*⚡மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளிடமிருந்து பெறும் தொகையை ரொக்கமாகச் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.01.2021 அன்று சமர்ப்பிக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களின் தேர்வுக் கட்டணத் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதிசெய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.*

_விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம்: 05.01.2021 - 12.01.2021._

_விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 12.01.2021._

_Summary Report_
*⚡தொகையை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள்: 13.01.2021 - 20.01.2021.*

*⚡மாவட்டக் கல்வி அலுவலர்கள் ரொக்க தொகையை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள். 25.01 -2021.*

Monday, 11 January 2021

*🙋‍♂️தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல்.. 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மட்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படும்-தமிழக முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.*

*🙋‍♂️தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல்.. 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மட்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படும்-தமிழக முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.*

*⚡19 ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்*

*⚡பொதுத்தேர்வு நடைபெறும் 10  மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 19 ம் தேதி  முதல் பள்ளிகள் திறக்கப்படும்.*

*⚡வகுப்புக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்- தமிழக அரசு*

Sunday, 10 January 2021

*🏆சிவகாமி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக "BEST AWARD -2021" விருது வழங்கும் விழா - செய்தி துளிகள்*

*🏆சிவகாமி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக "BEST AWARD -2021" விருது வழங்கும் விழா - செய்தி துளிகள்*

*🏆கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவகாமி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக "BEST AWARD -2021" விருது வழங்கும் விழா  (10.01.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஏ.கே.டி கல்வி நிறுவன ஆடிடோரியத்தில் நடைபெற்றது.*

*🏆தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்து சிறந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் என மொத்தம் 100 க்கும் மேற்பட்டவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.*

*🏆சிவகாமி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் _திரு.ஆ.கோபி_ அவர்கள் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்.*

*🏆கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் _திருமதி.கா.கார்த்திகா_ அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை நிகழ்த்தி விருதுகளை வழங்கினார்.*

*🏆சங்கராபுரம் வட்டாட்சியர் _திரு.ப.நடராஜன்_ அவர்களும், சங்கராபுரம் உதவி காவல் ஆய்வாளர் _திரு.ஆர்.திருமால்_ அவர்களும் முன்னிலை வகித்து சிறப்புரை நிகழ்த்தி விருதுகளை வழங்கினார்கள்.*

*🏆தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை  துறைத்தலைவர் _பேராசிரியர்.பெ.இளையாப்பிள்ளை_ அவர்கள் விழாவினை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தி விருதுகளை வழங்கினார்.*

*🏆கள்ளக்குறிச்சி மேனாள் மா.க.அலுவலர் _புலவர்.சிலம்பூர்க்கிழான்_ அவர்களும்*

*⚡கள்ளக்குறிச்சி கல்லைத் தமிழ்ச்சங்கம் _புலவர்.செ.மதிவாணன்_ அவர்களும்,*

*⚡கள்ளக்குறிச்சி TNSLF Society தலைவர் _திரு.சு.சுந்தரவடிவேல்_ அவர்களும்,*

*⚡சென்னை TNSLF Society பொதுச்செயலாளர் _திரு.மு.ஷேக்முகைதீன்_ அவர்களும்,*

*⚡சென்னை TNSLF Society து.செயலாளர் _திரு.மு.முத்துக்குமாரசாமி_ அவர்களும்,*

*⚡கள்ளக்குறிச்சி TNSLF Societly பொருளாளர் _திரு.நா.சுரேஷ்_ அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.*

*🏆கீழ்ப்பாடி அ.மே.நி.பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் _திரு.ப.சௌந்தரராஜன்_  அவர்கள் விழாவினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்.*

*🏆திருமதி.உஷாராணி, திருமதி.இரா.கோ.கலைமகள் காயத்ரி, ஆகியோர் விழா தொகுப்பாளர்களாக சிறப்பாக பணியாற்றினார்கள்.*

*🏆சங்கராபுரம் கல்வியாளர் _திரு.ப.செந்தில்முருகன்_ நன்றியுரை வழங்கினார்.*

*******************************

💐🏆💐🏆💐🏆💐🏆💐🏆💐
*⚡இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த சிவகாமி அகாடமி நிறுவன தலைவர் _திரு.ஆ.கோபி_ அவர்களுக்கும்,*

*⚡விழாவினை தலைமையேற்று நிகழ்த்திய கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் _திருமதி.கா.கார்த்திகா_ அவர்களுக்கும்,*

*⚡விழா சிறப்பு விருந்தினர்கள்,  ஒருங்கிணைப்பாளர்கள், தொகுப்பாளர்கள், விழா குழுவினர்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருக்கும்,*

*⚡விழா சிறப்பாக நடத்த இடம் வழங்கிய கள்ளக்குறிச்சி ஏ.கே.டி கல்வி நிறுவன நிறுவனர் அவர்களுக்கும்,*

*⚡விழா கதாநாயகர்களாக வீற்றிருந்து விருதுகளை பெற்றுக்கொண்ட அனைவருக்கும்,*

*⚡கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும்,*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*_"AYAN EDUCATION NEWS"_* _AYAN SARAVANAN_ *சார்பாக நன்றி கலந்த வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
www.ayaneducationnews.blogspot.com
💐🏆💐🏆💐🏆💐🏆💐🏆💐


Wednesday, 6 January 2021

*🗣️மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது: புது உத்தரவு*

*🗣️மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது: புது உத்தரவு*

_மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது:_

*🗣️புது உத்தரவு மத்திய அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது – ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.*

*🗣️அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும்.  இது 1.4.2021 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்.*

*🗣️ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது.*

*🗣️அதன்படி 22 வயதில் சேர்ந்த ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுவார்.*

_நன்றி!_
*இந்தியா Tamil Mint* _டிசம்பர் 31, 2020_

*🧫கர்நாடகாவில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*

*🧫கர்நாடகாவில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*

*🧫கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கியதை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளனர். ஆனால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது மிக அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.*

*🧫கொரோனா பரவலுக்கு இடையே கர்நாடகாவில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த 1ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனாலும் பள்ளியில் நோய் தொற்று ஏற்பட தொடங்கியுள்ளது.*

*🧫பள்ளிகள் திறந்த 6 நாட்களே ஆகியுள்ள நிலையில் ஆசிரியர்களும் , மாணவ, மாணவிகளும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.*

*🧫அந்த வகையில், ஹாவேரி, சிக்கமகளூருவில் 3 ஆசரியர்களுக்கு கொரோனா ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.*

*🧫இதனால் அந்த பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*

Friday, 1 January 2021

*📲அனைத்து ஆசிரியர்களுக்கும் ஐனவரி 18 முதல் Jolly Phonics ஆன்லைனில் பயிற்சி நடத்துவதற்கான வழிகாட்டுதல்!*

*📲அனைத்து ஆசிரியர்களுக்கும் ஐனவரி 18 முதல் Jolly Phonics ஆன்லைனில் பயிற்சி நடத்துவதற்கான வழிகாட்டுதல்!*
 
*📲ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் வாயிலாக 2018-19ம் கல்வியாண்டில் Jolly Phonics பயிற்சி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.*

*📲இதனைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளின் அனைத்து ஆசிரியர்களுக்கும் (SGT, BT and PG) Phonetic பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு மாவட்ட அளவில் பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டது.*

*📲Covid – 19 கால சூழ்நிலை மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்பயிற்சியினை காணொளி வாயிலாக வழங்கவும், முதற்கட்டமாக மாவட்ட அளவிலான பயிற்சி 04.01.2021 முதல் 8 நாட்களுக்கு அரை நாள் வீதம் (09.30 AM – 01.00PM) வரை காணொளி வாயிலாக பயிற்சி அளிக்கவும், இதனைத் தொடர்ந்து வட்டார அளவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 18.01.2021 முதல் காணொளி வாயிலாக பயிற்சி அளிக்கவும் திட்டமிடபட்டுள்ளது.*

*📲மேற்காண் பயிற்சியினை சிறந்த முறையில் அளிக்கவும், உரிய நேரத்தில் ஆசிரியர்களை பயிற்சியில் பங்கேற்கவும் அறிவுறுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி 9.45AM – 11:15AM வரை முதல் பாடவேளை 11.15AM – 11.30AM வரை இடைவேளை 11.30 AM – 1.00PM வரை இரண்டாவது பாட வேளைகளாக நடைபெறும் பயிற்சிக்கான Link மூலமாக 9.30 ( மணிக்கு பயிற்சியில் இணையவும், இணைந்தவுடன் தங்களது Mic mute செய்திடவும் தங்களது வருகையை Google Meet ல் உள்ள Chat Boxல் பதிவிட வேண்டும் பயிற்சியின்போது வழங்கப்படும் கருத்துக்களை குறிப்பெடுத்து ஒவ்வொரு நாள் இறுதியில் கேட்கப்படும் கேள்விற்கு பதிலளிக்க வேண்டும். பயிற்சியின் இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு Chat Box வழியாக பதியளிக்கலாம்.*

*📲பயிற்சி சார்ந்து கருத்தாளரிடம் கேள்விகள் ஏதேனும் கேட்கவேண்டும்போது மட்டுமே Mic Unmute செய்து கேட்க வேண்டும் இரண்டாவது வேளை இறுதியில் Google fom வழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பங்கேற்பாளர்கள் அனைவரும் பதிலளிக்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் Google Meeti Present பட்டனை அழுத்தக்கூடாது என்பதனையும் Google Meet எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

*📲ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கருத்தாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். கருத்தாளர்கள் மற்றும் கணினி இயக்க தெரிந்த ஒரு நபருடன் இணைந்து 90 – 95 ஆசிரியர்களுக்கு ஒரு Batch ஆக பயிற்சி அளிக்கலாம் ஒன்றியத்திலுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்ப Batch எண்ணிக்கை வட்டார அளவில் தேர்வு செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சியினை 18.01.2021 தொடங்கி – 28.02.2021 க்குள் பயிற்சியளித்து முடிக்கும் வகையில் அட்டவணை தயார் செய்து பயிற்சி அளிக்க வேண்டும்.மாநில திட்ட இயக்ககத்தின் வாயிலாக நடைபெறும் பயிற்சிகள் பாதிக்காவண்ணம் வட்டார அளவிலான பயிற்சி அட்டவணை தயார் செய்து பயிற்சி நடத்தப்படவேண்டும்.*

*📲இணைய வசதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்கும் வகையில் வட்டார வளமையத்தில் நேரடியாக சமூக இடைவெளியுடன் பங்கேற்க செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் ஆசிரியர்களின் பங்கேற்பினை உறுதி செய்யவும், ஆசிரியர்களின் வருகை பதிவினை கண்காணித்து அறிக்கை அளிக்கவும் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பயிற்சி சார்ந்த கட்டகத்தை நகல் எடுத்து பயிற்சியின் போது கட்டாயம் பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

*📲பயிற்சி நடைபெறுவதை இனையவாயிலாக (Link) கண்காணித்திட மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பயிற்சியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் நடத்திடவும், பயிற்சியில் பங்கேற்றோர் விவரம், ஆசிரியர்களின் பின்னூட்ட அறிக்கை மற்றும் புகைப்பட ஆவணங்களுடன் அறிக்கை அளிக்க அனைத்து வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*