AYAN EDUCATIONA NEWS

Monday, 5 May 2025

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற 08.05.2025 அன்று வெளியிடப்பட உள்ளது.
TN Board Results https://tnresults.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட உள்ளார்.

Wednesday, 25 May 2022

🧏TPF/GPF Account Slip (கணக்கீட்டுத்தாள்) பதிவிறக்கம் செய்வது எப்படி?

🧏TPF/GPF Account Slip (கணக்கீட்டுத்தாள்) பதிவிறக்கம் செய்வது எப்படி? 🌏2021-2022ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip )/ பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.* 🔄⬇️கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய http://www.agae.tn.nic.in/onlinegpf/ என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம் 💸💸💸💸💸💸💸💸💸💸💸💸 USER NAME : TPF NUMBER DOB : DD/MM/YYY SUFFIX : PTPF Note: Account slip Download only Desktop or Laptop

Tuesday, 7 September 2021

*🛡️சட்டசபையில் 110வது விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்:*

*🛡️சட்டசபையில் 110வது விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்:*

*🛡️அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜன., முதல் DA உயர்த்தப்படும். இதனால்,16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். அரசுக்கு 6480 கோடி ரூபாய் கூடுதல் செலவு*

*🛡️அரசு பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தில் மகன், மகள் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள்*

*🛡️ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியில் அமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும்.*

*🛡️அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும்*

*🛡️சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக அதிகரிக்கப்படும்.*

*🛡️மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கோவிட் 19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை.*

*🛡️அரசு அலுவலகம் /பள்ளியில் இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.*

*🛡️அரசு பள்ளிகளில் மாணவர்களின் விகிதாச்சார எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.*

*🛡️கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம் பணி நாட்களாக கருதப்படும். பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும்.*

*🛡️2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும். ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும்*

*🛡️அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்*

*🛡️புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்*

*✍️அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றும்*

Saturday, 28 August 2021

*✍️பள்ளிகள் திறப்பு - தலைமையாசிரியர்களுக்கான சுற்றறிக்கை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு:*

*🤝பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் :*

*📢01.09.2021 முதல் அனைத்துவகைப் பள்ளியைதிறப்பது தொடர்பாக அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு சுற்றறிக்கை*

*📆வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்கள்*

*👨‍🏫10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும்.*

*😇ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள் மட்டுமேசமூக இடைவெளி பின்பற்றி அமரவைக்க வேண்டும்.*

*😇போதிய இடவசதிஇல்லை எனில் , 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப் பெறவேண்டும்.*

*😇உயர்நிலைப்பள்ளிகளில் 9 - ம் வகுப்பு மற்றும் 10 - ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும் , போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9 - ம் வகுப்பு சுழட்சி முறையில் செயல்படவேண்டும்.*

*📡தனியார் பள்ளிகளில் மட்டும் , பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி ( Online Class ) வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.*

*😷மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் ( Mask ) அணியவேண்டும்.*

*👋மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி ( Sanitizer ) சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும்.*

*🧍‍♀️    🧍‍♂️பள்ளிவளாகத்தில் அனைவரும் SOP தவறாது பின்பற்ற வேண்டும்.*

*💉அனைத்து ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.*

*🤷‍♂️பள்ளிக்கு வருகை புரிவதிலிருந்து விலக்கு பெற்ற ஆசிரியர்கள் 01.09.2021 முதல் பள்ளிக்கு தவறாது வருகைபுரிய வேண்டும்.*

*💉கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.*

*💉கோவிட் -19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவர்கள் 90 நாட்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.*

*📢கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் , அதற்கான விலக்குகோரும் சான்றினை மாவட்டசுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.*

*🤷‍♂️100 நாள்வேலைவாய்ப்புத்திட்டப் பணியாளர்களைக் கொண்டு பள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தப்படுத்த வேண்டும்.*

*📲EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.*

*✍️மருத்துவ உதவிமைய எண் மற்றும் அருகிலுள்ள ஆரம்பசுகாதார நிலைய அலைபேசி எண் ( Help Line ) உள்ளிட்டவிவரங்கள் தகவல்பலகையில் மாணவர்கள் / ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தெளிவாக பார்வையிடும் வகையில் இருத்தல் வேண்டும் .*

*📲EMIS விவரங்களை நாள்தோறும் உடனுக்குடன் புதுப்பித்தல் வேண்டும்.*

*🌡️மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை கண்காணித்து உரிய பதிவேட்டில் பராமரித்தல் வேண்டும்.*

*📲EMIS இணையதளத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் தவறாது பதிவேற்றம் செய்திருத்தல் வேண்டும்.*

*📢சமூக இடைவெளியை தவறாது கடைபிக்க வேண்டும்.*

*❌P.E.T. , N.S.S. , N.C.C. , தொடர்பான செயல்பாடுகள் பள்ளிவளாகத்தில் செயல்படுதல் கூடாது.*

*🧍‍♀️       🧍‍♂️மாணவர்களுக்கான சமூக இடைவெளியினை கடைபிடித்து வகுப்பறையில் அமரவைக்க வேண்டும்.*

*🩺தேவைப்படின் RBSK தொடர்புகொண்டு சிறப்பு முகாம் நடத்தி மாணவர்களின் உடல்நிலை | ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும்.*

*🛡️மாணவர்களுக்கு தொற்று ஏற்படாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.*

*🏩மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சமூக இடைவெளி , SOP நடைமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.*

*🚌மாணவர்களுக்கான இலவச பேருந்துபயண அட்டை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.*

*💊சத்துமாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் .*

*📌45 நாட்களுக்கு மாணவர்களுக்கான Bridge Course கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.*

*📌கொரோனாபாதிப்புஏற்பட்டநாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகேதடுப்பூசிசெலுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.*

*📌அவ்வபோது பள்ளிகளை ஆய்வு செய்ய உயர் அலுவலர்கள்வருகைதரஉள்ளதால் , மேற்காணும் அனைத்துதொடர்நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

Saturday, 7 August 2021

Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை pdf வடிவில் பெற்றுக்கொள்ள

Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19  தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை  pdf வடிவில் பெற்றுக்கொள்ளலாம்..

1. முதலில்  9013151515 என்ற எண்ணை  உங்கள் மொபைலில் save செய்துகொள்ளுங்கள்.

2. அந்த எண்ணை whatsapp இல்  open செய்து " Download certificate" என்று type செய்து  அனுப்புங்கள்.

3. உடனே உங்கள் மொபைலில்  message inbox  இல் 6 இலக்க OTP வரும்..அதை whatsapp இல்  type செய்து அனுப்புங்கள்.

4. Type  1. for Downloading Cowin vaccination Certificate என்று  message  வரும்...

5.  1  என்ற எண்ணை type செய்து அனுப்பவும்..

உடனே  pdf   வடிவில்  COVID vaccination  certificate   பெற்றுக்கொள்ளலாம்.👍👍👍

Thursday, 8 July 2021

✍️தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 15-ந் தேதி கடைசிநாள்

✍️தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 15-ந் தேதி கடைசிநாள்

🗣️சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

✍️தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

✍️இத்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

✍️தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்றிதழ் ஆகியவற்றை விண்ணத்துடன் இணைக்க வேண்டும். 

✍️தேர்வு செய்பவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் ரூ.500 மருத்துவப்படி அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.